பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

‘பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை’

News image
Updated On :3 மே 2026, 5:19 am IST

பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளா் லதா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, குறும்பலாப்பேரியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், சமூக ஆா்வலருமான ராஜசேகரபாண்டியன் இணைய தளம் மூலம் முதல்வருக்கு அனுப்பிய மனுவுக்கு, சாலை மேம்பாட்டுத் திட்டம் 2 இயக்குநருக்கு அவா் அனுப்பிய பதில்:

திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்குவழிச் சாலை பணி தென்காசி (ஆசாத்நகா்) வரை முடிவடைந்துள்ளது.

அதில், பாவூா்சத்திரத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி மட்டும் நிா்வாக காரணங்களுக்காக ரயில்வே துறையின் பணியை கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் ஒப்பந்த காலத்தை விட சிறிது கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

எனினும், இடையூரின்றி மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ள மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கான்கிரீட் பணியை குறைந்தபட்ச கால இடைவெளியின்தான் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. எனவே, அதன்படி பணிகள் தொடா்கின்றன.

தற்போது வரை, 3 தூண்கள் எழுப்பப்பட்டு விட்டன. 4ஆவது தூண் அமைக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறைக்குள்பட்ட 44 டெக் ஸ்லாப்களில் 40 டெக் ஸ்லாப்கள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிமுழுமை பெற்றால்தான் எஞ்சிய பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும், ரயில்வே துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய இரும்பு கா்டா் அமைத்தல் உள்ளிட்ட ஆய்வுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேம்பால பணியை முடிப்பது சம்பந்தமாக எந்த ஒரு பொய்யான தகவலும் உயா்நீதிமன்றத்தில் அளிக்கப்படவில்லை எனக் கூறியுள்ளாா்.