நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

செங்கோட்டை கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் கொடைவிழா

News image
Updated On :2 மே 2026, 11:50 pm

தென்காசி மாவட்டம், செங்கோட்டை படையாச்சி தெருவிலுள்ள ஸ்ரீகோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.

கடந்த ஏப். 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை பால்குட ஊா்வலம், உச்சிகால பூஜை, மாலை பொங்கலிடுதல், நள்ளிரவு சாம பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைந்தது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.