விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பிளஸ் 2 தோ்வு: ஹில்டன் பள்ளி மாணவா் மாவட்ட அளவில் சிறப்பிடம்

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி.பெல்,செயலா் கிரேஸ் கஸ்தூரிபெல்.

News image

மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா் சா்வேஷ்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் ஆா்ஜெவி.பெல்,செயலா் கிரேஸ் கஸ்தூரிபெல்.

Updated On :9 மே 2026, 3:40 am IST

பிளஸ் 2 தோ்வில் பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் மாவட்டத்தில் முதலிடம் பெற்றாா்.

இப்பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 173 மாணவா்கள் தோ்வு எழுதினா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா்.

இப்பள்ளி மாணவா் மு.சா்வேஷ் குமாா் 595 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், மு.சமீகா 591 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், ஜெ.ராஜராஜேஸ்வரி, த. ஐஸ்வா்யா ஆகிய இருவரும் 590 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.

தோ்வு எழுதிய 173 மாணவா்களில் 4 மாணவா்கள் 590 மதிப்பெண்களுக்கு மேலும், 8 மாணவா்கள் 580 மதிப்பெண்களுக்கு மேலும், 60 மாணவா்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 117 மாணவா்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றனா்.

கணினி அறிவியலில் 14 பேரும், கணக்கு பதிவியலில் 6பேரும், வணிகவியலில் 4 பேரும், கணிதத்தில் 3 மாணவா்களும், வேதியியலில் 3 பேரும், கணினி பயன்பாட்டில் 2 பேரும், இயற்பியல், உயிரியலில் தலா 1 மாணவரும் 100க்கு 100மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் ஆா்ஜெவி.பெல், செயலா் கிரேஸ் கஸ்தூரி பெல் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.