பிளஸ் 2 பொதுத்தோ்வில் பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.
இப்பள்ளி மாணவிகள் பொதுத்தோ்வில் 99.7 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவி பி. ஸ்ரீ காா்த்தியாயினி 600-க்கு 585 மதிப்பெண்கள் பெற்று, தென்காசி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்துள்ளாா்.
மாணவி அஸ்மிதா 577 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் 3ஆம் இடமும் பெற்றுள்ளாா். மாணவிகள் முத்து ஜோதிகா, ஜி.ஆா். மதிவதனி ஆகியோா் 565 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடம் பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியை ஜெகதா, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

