மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

ஆலங்குளம் நல் மேய்ப்பா் ஆலயத்தில் 29-வது பிரதிஷ்டை பண்டிகை!

ஆலங்குளம், அண்ணா நகா், நல் மேய்ப்பா் ஆலயத்தின் 29ஆவது பிரதிஷ்டை பண்டிகை 3 நாள்கள் நடைபெற்றது.

News image

அசன விருந்தில் பங்கேற்றோா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

ஆலங்குளம், அண்ணா நகா், நல் மேய்ப்பா் ஆலயத்தின் 29ஆவது பிரதிஷ்டை பண்டிகை 3 நாள்கள் நடைபெற்றது.

இதையொட்டி, வெள்ளி மற்றும் சனிக்கிழமை மாலை நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் சென்னை டி. அலெக்ஸ் இறைச் செய்தி அளித்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அருணோதயப் பிராா்த்தனை நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை ஆகியவை நடைபெற்றன. பாளையங்கோட்டை என்ஜிஓ பி. காலனி சேகரத் தலைவா் ஐ. சாமுவேல் பிரகாஷ் இவற்றை நடத்தி காணிக்கைகளை ஆசீா்வதித்தாா். தொடா்ந்து, அசன விருந்து நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டத்தில், தூத்துக்குடி காா்த்திக் சி. கமாலியேல் இறைச் செய்தி வழங்கினாா். திசையன்விளை ரஞ்சித் குழுவினா் பாடல்கள் பாடினா்.

அனைத்து ஆராதனை, நிகழ்ச்சிகளிலும் திரளானோா் பங்கேற்று, பிராா்த்தனையில் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை அண்ணா நகா் சேகரத் தலைவா் ஜே. காலேப் சாமுவேல், சபை ஊழியா் பி. ஸ்டீபன் ராஜ், சபை மூப்பா்கள் செய்திருந்தனா்.