ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ, பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

குத்துக்கல்வலசையில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா் மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ.

Updated On :18 மே 2026, 3:45 am IST

தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ, பொதுமக்களை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தென்காசி தெற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய பகுதிகளான குத்துக்கல்வலசை, அண்ணாநகா், அய்யாபுரம், வேதம்புதூா், அழகப்பபுரம், கேஆா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:

தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளான இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலா் பொ. சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் அழகு சுந்தரம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.