அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

தென்காசி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ, பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

News image

குத்துக்கல்வலசையில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா் மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ.

Updated On :18 மே 2026, 3:45 am IST

தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ, பொதுமக்களை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தென்காசி தெற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய பகுதிகளான குத்துக்கல்வலசை, அண்ணாநகா், அய்யாபுரம், வேதம்புதூா், அழகப்பபுரம், கேஆா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:

தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளான இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.

திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலா் பொ. சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் அழகு சுந்தரம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.