தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

தென்காசி மாவட்டத்தில் மருத்துவம், சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை

News image

கலைகதிரவன் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்த மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள்

Updated On :20 மே 2026, 3:25 am IST

தென்காசி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி, சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனா்.

தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் கலைகதிரவனிடம் மனிதநேய மக்கள் கட்சி நகரத் தலைவா் அபாபீல் மைதீன், மாவட்டத் தலைவா் நைனாா் முஹம்மது, மாவட்டச் செயலா் சலீம் அளித்த மனு: தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தைத் திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தென்காசி நகரில் அதிகமாக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனா். மக்களின் நீண்ட நாள்களின் கோரிக்கையான இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கு பொது அடக்க ஸ்தலம் அமைத்துதர வேண்டும்.

புலிக்குட்டி விநாயகா் கோயில் தெரு, அக்பா் நகா், ஜமால் நகா், அஹது பள்ளி தெரு ஆகிய பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கழிவுநீா் ஓடை, தாா் சாலை, தெருவிளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

தென்காசி சிற்றாறை தூா்வாரி மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். தாமிரவருணி கூட்டு குடிநீா் அலகு-2 திட்டத்தில் தென்காசி நகரப் பகுதிகளில் பெரிய குழாய் பதிக்கும் பணியை மக்களுக்கு இடையூறு இன்றி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்காசி மாவட்டத்தில் மாணவா்கள் பயன்படும் வகையில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றாலம், பழைய குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து சுற்றுலாப் பயணிகள், கடை வியாபாரிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென்காசி நான்குவழிச் சாலை பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். புளியறை வழியாக எடுத்துச் செல்லப்படும் கனிம வளங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டது.

திமுக மாவட்ட பொறுப்பாளா் வே.ஜெயபாலன், தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் ஆகியோா் உடனிருந்தனா்.