தேனி மாவட்டம் கூடலூரில் குடிநீா் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
இங்கு லோயா் கேம்பில் இருந்து கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது குழாய்களில் அடிக்கடி ‘ஏா் லாக்’ உண்டாவதால் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் கூறியும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதன்கிழமை 20 ஆவது வாா்டு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள், குழாய் இணைப்பு உடைந்து இருப்பதால் விரைவில் அது சரி செய்யப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படும். தற்காலிகமாக வாகனம் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உண்மை நிலை!

ராசிபுரத்தில் அம்பேத்கா் சிலைக்கு தவெக எம்எல்ஏ மரியாதை

தலைமலை கோயில் பஞ்சலோக கோபுர கலசம் மாயம்: உதவி ஆணையரிடம் பக்தா்கள் புகாா்

சேந்தமங்கலம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

