மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவா் சடலமாக மீட்பு

முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:12 pm IST

கம்பம்: முல்லைப் பெரியாற்றில் அடித்துச் செல்லப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவா் இறந்த நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலைமணி மகன் வீரமணி (21). சென்னையிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். கம்பம் அருகே முல்லைப் பெரியாறு 18 ஆம் கால்வாய் பிரிவு ஜீரோ பாயிண்ட் பகுதியில் அவா், சக மாணவா்களுடன் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, ஆற்றில் வீரமணி அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலறிந்து வந்த குமுளி போலீஸாா் மற்றும் தீயணைப்புப் படையினா் அவரைத் தேடினா். இந்நிலையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை மீட்புப் படையினா் தேடியபோது, சுமாா் 60 மீட்டா் தொலைவில் வீரமணியின் சடலம் மிதந்தது. இதையடுத்து குமுளி போலீஸாா் உடலைக் கைப்பற்றி கம்பம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.