ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வருசநாடு பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து வருசநாடு போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு கஞ்சா, உயர்ரக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 300 கிராம் கஞ்சா, 12 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான பொம்மையசாமி (38) என்பவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







