திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பெட்டிக்கடையில் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

ஆண்டிபட்டி அருகே பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

பொம்மையசாமி.

Updated On :9 ஜனவரி 2021, 10:17 pm IST

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வருசநாடு பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து வருசநாடு போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு கஞ்சா, உயர்ரக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 300 கிராம் கஞ்சா, 12 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான பொம்மையசாமி (38) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.