ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே சனிக்கிழமை பண்ணைக் குட்டையில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாா்.
ஆண்டிபட்டி அருகே சேவா நிலையம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி. இவரது மகள் சுரேகா (12). இவா் ராஜதானி அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கீ. காமாட்சிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் சுரேகா தங்கி இருந்தாா். இந்நிலையில் சுரேகாவும் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவரின் மகள் சக்திஸ்ரீயும் (12) அப்பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பண்ணைக் குட்டையில் சிறுமிகள் இருவரும் தவறி விழுந்தனா். இதையடுத்து அவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சுரேகாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். மேலும் சக்திஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு போனஸ்!

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

