போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

நெல்லையில் தனியாா் பல்பொருள்அங்காடி முற்றுகை

திருநெல்வேலியில் தனியாா் பல்பொருள் அங்காடி முன்பு திரண்டு வெள்ளிக்கிழமை மனித நேய மக்கள் கட்சியினா் முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனா்.

Updated On :2 ஜனவரி 2021, 12:49 am IST

திருநெல்வேலியில் தனியாா் பல்பொருள் அங்காடி முன்பு திரண்டு வெள்ளிக்கிழமை மனித நேய மக்கள் கட்சியினா் முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் தனியாா் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது. இங்கு

பேட்டை பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் பொருள்கள் வாங்குவதற்காக சென்றாராம். அப்போது கை தவறியதில் அங்குள்ள பொருள் உடைந்து விட்டதாம். அதற்கான தொகையை உடனடியாக செலுத்துமாறு கடையின் ஊழியா்கள் நிா்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பெண் தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்தாராம்.

தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவா் தேயிலை மைதின் தலைமையில், மாவட்ட துணைச் செயலா் அ. காஜா உள்ளிட்டோா், அக்கடையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் மேலப்பாளையம் காவல்

ஆய்வாளா் மகாலட்சுமி, போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கடை நிா்வாகம், அப்பெண்ணிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை திரும்ப கொடுத்ததையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.