கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

களக்காட்டில் எஸ்டிபிஐ தெருமுனை பிரசாரக் கூட்டம்

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் களக்காட்டில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 12:42 am IST

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சாா்பில் களக்காட்டில் தெருமுனைப் பிரசாரக் கூட்டம் மணிக்கூண்டு திடலில் நடைபெற்றது.

எஸ்டிபிஐ நகரத் தலைவா் ஜாபா் முகம்மது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமாலுதீன், இணைச் செயலா் ராஜா முகம்மது, பொருளாளா் முகம்மது மதாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா, மாநகா் மாவட்ட விவசாய அணி ஒருங்கிணைப்பாளா் ஷேக் அப்துல்லா, நகர செயலா் பிமாஸ் உசேன், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் சித்திக் அஸிஸூா் ரஹ்மான், நகர காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ்வில்சன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சுந்தா், தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா், இளஞ்சிறுத்தை பாசறை மாவட்ட துணை அமைப்பாளா் ஜான்சன் , புரட்சி பாரதம் மாவட்டச் செயலா் நெல்சன்ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.