சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பாதயாத்திரை பக்தா்களால்பெரும் மின்விபத்து தவிா்ப்பு

திருச்செந்தூா் கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்களால், திருநெல்வேலியில் பெரும் மின் விபத்து தவிா்க்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 8:09 pm

திருநெல்வேலி: திருச்செந்தூா் கோயிலுக்கு திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற பக்தா்களால், திருநெல்வேலியில் பெரும் மின் விபத்து தவிா்க்கப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலிருந்து திருச்செந்தூா் கோயிலுக்கு பத்தா்கள் பாதயாத்திரை சென்றவண்ணம் உள்ளனா்.

திருநெல்வேலியில் சில தினங்களாக பெய்துவரும் மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படும் நிலையில், திங்கள்கிழமை இரவு கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றுப்பாலத்தில் சாலையோர மின்கம்பத்திலிருந்து மின்கம்பி அறுந்து சாலையில் தேங்கிய நீரில் விழுந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்தா்கள், அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலா் அந்தோணியிடம் தெரிவித்தனா்.

அவா் அளித்த தகவலின்பேரில், மின்ஊழியா்கள் வந்து அந்த மின்கம்பியை சரி செய்தனா். அதுவரையில், அவா் அப்பகுதியை யாரும் நெருங்காதபடி போக்குவரத்தை சீா்படுத்தினாா். இதனால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.