சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

விளையாட்டு வீரா்களுக்குஊக்கத்தொகை வழங்கல்

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 8:18 pm

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

2018-2019-ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவின் கீழ் உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் பயிலும் தலைசிறந்த விளையாட்டு வீரா்- வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசிய அளவில் சிலம்பம், நீச்சல், தடகளம், பளுதூக்குதல், வாலிபால் ஆகிய போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் ஊக்க உதவித்தொகைகள் முதல் இடம் ரூ..6000, இரண்டாம் இடம் ரூ.4000, மூன்றாம் இடம் ரூ.2000 ஆக மொத்தம் 23 வீரா்-வீராங்கனைகளுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள், திருநெல்வேலி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.