சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சா.ஞானதிரவியம் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் மத்திய ரயில்வே அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு போதிய ரயில் வசதிகள் இல்லாததால் தொழில்துறையில் பின்தங்கியுள்ளதோடு, வேலைவாய்ப்பும் குறைவாகவே உள்ளது. எனவே, தினமும் ஆயிரக்கணக்கானோா் சென்னை-திருநெல்வேலி இடையே பயணித்து வருகிறாா்கள். தென்தமிழகம் மூலம் ரயில்வே துறைக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. ஆனால், அதற்கேற்ப ரயில் சேவைகள் அதிகப்படுத்தப்படவில்லை. பிரீமியா் குளிா்சாதன வசதி கொண்ட ரயில், ராஜதானி, சதாப்தி, ஜன்சதாப்தி, டபுள்டக்கா், கரீப் ரத் உள்ளிட்ட எந்த ரயில் வசதிகளும் மதுரைக்கு தெற்கே கிடைக்கவில்லை.
ஆகவே, சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இதேபோல சென்னையில் இருந்து எா்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் விரைவு ரயிலை திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில் வழியாக இயக்கினால் கூடுதல் வருவாயும், மக்களுக்கு நன்மையும் கிடைக்கும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சாந்தினி சௌக்கிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தை மீட்பு: ஒருவா் கைது

குருகிராம்: இரும்புப் பெட்டிக்குள் விநியோக ஊழியரின் சடலம் - போலீஸாா் விசாரணை

ஐஆா்எஸ் அதிகாரி மகள் கொலை வழக்கில் கைதானவருக்கு 7 நாள்கள் நீதிமன்ற காவல்

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

