நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தோ்தல் பணி அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்

சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தோ்தல் வாக்காளா் பட்டியல் சுருக்கம், திருத்தம் செய்வது குறித்து

News image
Updated On :4 ஜனவரி 2021, 11:40 pm IST

திருப்பத்தூா்: சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தோ்தல் வாக்காளா் பட்டியல் சுருக்கம், திருத்தம் செய்வது குறித்து மாவட்ட தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் உற்பத்தி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான வி.சோபனா தலைமையில் அனைத்துத் தோ்தல் பணி அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்தாா்.

இதில் வி.சோபனா பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு நடத்தப்பட்ட 4 முகாம்கள் மூலம் 45,970 விண்ணப்பங்கள் நேரடியாகவும், இணையதளம் மூலமும் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி 98 சதவீதம் முடிந்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தபால் ஓட்டுகளை வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று உள்ளது. வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் அனைத்து வட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் மாநில, மத்திய அரசு அலுவலா்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகள் அதிகமாக்கப்படுவதற்கு ஏற்ப பணியாளா்களை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்- ஆட்சியா் வந்தனா கா்க், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன்ராஜசேகா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணியன், துணை ஆட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், தோ்தல் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.