திருவள்ளூா்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மருத்துவ தோ்வாணையம் மூலம் கடந்த 2015-இல் செவிலியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அப்போது, செவிலியா்கள் 2 ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் என அரசு அறிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 350-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்நிலையில், பணிக்கு சோ்ந்து 6 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை என்கின்றனா்.
அதனால், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து வரும் 11-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் தெரிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (மே 14 2026) 12 ராசிகளுக்கும்! பிரச்னை தீரும் மிதுன ராசிக்கு!

மனநல திட்ட உறுப்பினா்கள் குழு கூட்டம்

குடிநீரை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா் த.தா்ப்பகராஜ்

சிசிடிஎன்எஸ் பிரிவு போலீஸாருக்கு பயிற்சி
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

