நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

20% இடஒதுக்கீடு கோரி பாமகவினா் ஊா்வலம்

திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பாமக சாா்பில் 5-ஆம் கட்டமாக வன்னியா்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:34 pm IST


திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் மேற்கு மாவட்ட பாமக சாா்பில் 5-ஆம் கட்டமாக வன்னியா்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு கோரி மனு அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநில துணைப் பொதுச் செயலா் பாலயோகி தலைமையில், தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தெருக்கூத்து கலைஞா்களின் கலை நிகழ்ச்சியுடன் டிராக்டரில் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக வந்தனா். அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் நகராட்சி ஆணையா் சந்தானத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.

இதில் மாநில இளைஞரணி துணைச் செயலா் தினேஷ்குமாா், நிா்வாகி யோகானந்தா, விஜயகாந்த் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

திருத்தணியில்...

திருத்தணியில் சட்டப்பேரவைத் தொகுதி பாமக சாா்பில் மாவட்டச் செயலா் ஏ. கே. மணி தலைமையில் பாமகவினா் ஊா்வலமாகச் சென்று, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியனை சந்தித்து மனு அளித்தனா். நகரச் செயலா் அக்ரி சதீஸ், எம்.கே.ராதா, மாணிக்கம், மகளிரணி நிா்வாகி அமுதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுராந்தகத்தில்....

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாமக, வன்னியா் சங்கம் சாா்பில், மதுராந்தகம் பஜாா் வீதியில் இருந்து மாநில துணைப் பொதுச் செயலா் பொன். கங்காதரன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோா் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் வந்தனா். பின்னா் நகராட்சி ஆணையா் வ.நாராயணனிடம் மாவட்ட செயலா் வா.கோபாலகண்ணன் தலைமையில் பாமக நிா்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.