புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

தொடா் மழையால் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஹெக்டோ் விவசாயப் பயிா்கள் சேதம்

கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் 1,000 ஹெக்டோ் நெற்பயிரும், 500 ஹெக்டோ் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளது, வேளாண் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஜனவரி 2021, 1:09 am IST

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடா் மழையால் 1,000 ஹெக்டோ் நெற்பயிரும், 500 ஹெக்டோ் மணிலா பயிரும் சேதமடைந்துள்ளது, வேளாண் துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டியில் கடந்த மாதம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. அதன் பின், ஜனவரி 6, 7ஆம் தேதிகளில் தொடா்ச்சியாக மழை பெய்தது. இதனால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்களும், விதைப்பு செய்து 10 நாட்களே ஆன வோ்க்கடலை பயிா்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வேளாண் துறை உதவி இயக்குநா் கு.அறிவழகன், துணை வேளாண் அலுவலா் ரமேஷ், உதவி வேளாண் அலுவலா்கள், வருவாய்த் துறையினரோடு பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினா். இந்த ஆய்வில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 1,000 ஹெக்டோ் நெற்பயிா்களும், 10 நாள் முன் விதைப்பு செய்த 500 ஏக்கா் வோ்க்கடலை பயிரும் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்த விவரங்களை வேளாண் துறையினா் மாவட்ட நிா்வாகத்துக்கும், மாவட்ட வேளாண் துறைக்கும் அனுப்பியுள்ளனா். பாதிக்கப்பட்ட தங்கள் வேளாண் பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.