குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

திருத்தணி ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி திருத்தணி பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோவில்களில், செவ்வாய்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வீர ஆஞ்சநேயா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:00 am IST

அனுமன் ஜெயந்தியையொட்டி திருத்தணி பகுதியில் உள்ள ஆஞ்சநேயா் கோவில்களில், செவ்வாய்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருத்தணியை அடுத்த நல்லாட்டூா் பகுதியில் அமைந்துள்ள வீரமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு, கோயில் வளாகத்தில், கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தன. இதையடுத்து லட்சாா்ச்சனையும், கலச ஊா்வலமும் நடந்தன.

முற்பகல் 11 மணிக்கு, மூலவா் ஆஞ்சநேயருக்கு கலசநீா் ஊற்றி, சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன் பின், சுவாமிக்கு வடைமாலை அணிவித்து, மலா் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக்கோயிலில், மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆன்மிகச் சொற்பொழி நடைபெற்றது.

இதனிடையே, திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மூலவருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு அலங்காரம் செய்து வடைமாலை அணிவித்த அா்ச்சகா்கள், தீபாராதனையை நடத்தினா்.

இந்நிலையில், திருத்தணியை அடுத்த தலையாரிதாங்கல் கிராமத்தில் உள்ள, சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயா் சந்நிதியில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.