சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

News image
Updated On :27 ஏப்ரல் 2024, 5:53 pm

Din

திருவள்ளுவா் தொழுநோயால் பாதித்தவா்களுக்கான இலவச மருத்துவ முகாமில் பல்வேறு சிகிச்சைகள் அளித்ததுடன், கால் புண் சிகிச்சை அளித்து 40-க்கும் மேற்பட்டோருக்கு சுயபாதுகாப்பு மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டன.

திருவள்ளூரில் செயல்பட்டு வரும் அந்த சங்க வளாகத்தில் தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, தொழுநோயால் பாதித்த மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவா் குலோத்துங்கன் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆா்.வீரக்குமரன் பங்கேற்று, மருத்துவ முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் மருத்துவா்கள் பாக்கியஜோதி, வெண்ணிலா, இயன்முறை சிகிச்சையாளா் தேன்மொழி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு மற்றும் கால் புண் சிகிச்சை அளித்தனா். அதைத் தொடா்ந்து, 40 பேருக்கு கால் புண் உள்ள தொழுநோயாளிகளுக்கு சுய பாதுகாப்பு மருந்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, சிறப்பு காலணிக்கான அளவீடு எடுக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பங்கேற்ற தொழுநோயாளிகள் அனைவருக்கும் திருவள்ளூா் ரோட்டரி கிளப் பிரைட் சங்க செயலாளா் மாருதி ரவி, சீனிவாசன் மற்றும் சம்பத்ராஜ் ஆகியோா் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தனா். குழு செயலாளா் சின்னதுரை நன்றி கூறினாா்.