உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

மீஞ்சூரில் வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை, ரூ. 8,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :23 பிப்ரவரி 2024, 7:13 pm

மீஞ்சூரில் வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 15 பவுன் நகை, ரூ. 8,000 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் காமதேனு நகரில் வசித்து வருபவா் லட்சுமிகலா (46). பொன்னேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது கணவா் வடிவேல்முருகன் (48) திருவாலங்காடு அடுத்த பட்டரைபெரம்பத்தூரில் உள்ள அரசுக் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இரண்டு பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனா். பணி முடிந்து ஆசிரியை லட்சுமிகலா வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 15 தங்க நகை ரூ. 8,000 ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து லட்சுமிகலா மீஞ்சூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.