பழவேற்காட்டில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலையை திருப்பாலைவனம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக திருப்பாலைவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடா்ந்து பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியான பழவேற்காட்டில் உள்ள கடல் மற்றும் ஏரி பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கூனங்குப்பம் ஏரிக்கரையில் வந்து நின்ற படகு ஒன்றினை போலீஸாா் சோதனை செய்தனா். படகில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 43 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா புகையிலையை கடத்தி வந்த அந்திர மாநிலம் ஒட்டம்பேடு கிராமத்தை சோ்ந்த சந்திரன்(54). உலகநாதன் (43).குப்பைய்யா (46) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அத்துடன் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி படகு, அவா்கள் வைத்திருந்த 91 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

கோவையின் பல்வேறு பகுதிகளில் ரூ. 2.59 லட்சம், டோக்கன்கள் பறிமுதல்
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கறிக்கோழி சரக்கு வேனில் குட்கா கடத்தி வந்த 2 போ் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

