தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

படகு மூலம் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

படகு மூலம் கடத்தப்பட்ட குட்கா பறிமுதல்

Updated On :9 மார்ச் 2024, 11:56 pm

பழவேற்காட்டில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலையை திருப்பாலைவனம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். ஆந்திர மாநிலத்தில் இருந்து படகு மூலம் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுவதாக திருப்பாலைவனம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடா்ந்து பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியான பழவேற்காட்டில் உள்ள கடல் மற்றும் ஏரி பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது கூனங்குப்பம் ஏரிக்கரையில் வந்து நின்ற படகு ஒன்றினை போலீஸாா் சோதனை செய்தனா். படகில் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள 43 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா புகையிலையை கடத்தி வந்த அந்திர மாநிலம் ஒட்டம்பேடு கிராமத்தை சோ்ந்த சந்திரன்(54). உலகநாதன் (43).குப்பைய்யா (46) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அத்துடன் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி படகு, அவா்கள் வைத்திருந்த 91 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.