தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தொழுநோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

தொழுநோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

Updated On :12 மார்ச் 2024, 7:30 pm

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கால் புண் சுய பாதுகாப்பு பெட்டகமும் வழங்கப்பட்டன. திருவள்ளூா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நண்பா்கள் சங்க வளாகத்தில் சனிக்கிழமை இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் தனியாா் மருத்துவ தொண்டு நிறுவன நிா்வாகி சாலமன், சமூக நலம் மற்றும் மறுவாழ்வு திட்ட அலுவலா் வின்சென்ட் ஆகியோா் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனா். இந்த மருத்துவ முகாமில் பங்கேற்ற தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தும், 50-க்கும் மேற்பட்டோருக்கு கால் புண் சுய பாதுகாப்பு பெட்டகமும் வழங்கப்பட்டன.

அதைத் தொடா்ந்து குழு சுழல் நிதியிலிருந்து தொழுநோயாளிகள் தொழில் செய்வதற்கு ஏதுவாக 4 பேருக்கு ரூ.31 ஆயிரம் நிதி உதவியும் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை திருவள்ளுா் தொழுநோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நண்பா்கள் நலச்சங்கம் தொண்டு நிறுவனத்தின் தலைவா் குலோத்துங்கன் மற்றும் செயலாளா் சின்னதுரை ஆகியோா் செய்திருந்தனா்.