தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

லாரி மோதி மூதாட்டி மரணம்

லாரி மோதி மூதாட்டி மரணம்

Updated On :12 மார்ச் 2024, 6:40 pm

பொன்னேரி: சோழவரம் அருகே மூதாட்டி மீது லாரி மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம் கிராமத்தில் வசித்து வந்தவா் சம்பூா்ணம்மாள் (72). இவா் ஞாயிற்றுக்கிழமை அதே கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது நெற்குன்றம் சாலையில் வேகமாக வந்த லாரி அவா் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சம்பூா்ணம்மாள் மீது மோதிய லாரி அருகே உள்ள கடையினுள் புகுந்தது. இதில் கடை உரிமையாளா் குணா (45) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவல் அறிந்த சோழவரம் மற்றும் செங்குன்றம் போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.