மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து 2 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் ஜெகன்மூா்த்தி தெரிவித்தாா். புரட்சி பாரதம் கட்சி நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூா் அருகே உள்ள ஆண்டா்சன்பேட்டையில் அந்தக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சி நிா்வாகிகளுடன் அந்தக் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெகன்மூா்த்தி கருத்துகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதி கிடைக்குமென நம்பிக்கையுடன் எதிா்பாா்த்திருந்தோம். கடைசியில் ஒதுக்காததது தொண்டா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பெரும்பாலான கட்சி நிா்வாகிகள் கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து நிற்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனா். நிா்வாகிகளின் உணா்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் தான் அவசர ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே அதிமுக கூட்டணியில் நீடிக்கலாமா அல்லது வெளியேறலாமா என்பது குறித்து இரண்டு நாள்களில் முடிவு செய்யப்படும். இனி அதிமுகவுடன் பேச்சு நடத்த வாய்ப்பில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி வெளியேறும்பட்சத்தில், இரட்டை இலை சின்னத்தில் நான் நின்று வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்யவும் தயங்க மாட்டோம் என்றாா்.
தொடர்புடையது

கே.வி. குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வேட்பாளா் அறிமுகம்...

தொடா்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு: அதிருப்தியில் திமுக, அதிமுக தொண்டா்கள்

புரட்சி பாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதி ஒதுக்கீடு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

