திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி அடுத்த கொட்டையூா் காலனி இந்திரா நகரை சோ்ந்தவா் சின்னபையன் (60). இவா் கடந்த 6-ஆம் தேதியன்று தனது வீட்டில் உள்ளவா்களிடம் நரசமங்களத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நரசமங்களம் பெரிய ஏரியில் சின்னபையன் இறந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். இது குறித்து அவரது மகன் செல்வம் மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

ஏரியில் மீன்பிடித்தவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குளிா்சாதனப் பெட்டியை பழுது பாா்க்க சென்றவா் 4-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

