பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On :8 ஏப்ரல் 2025, 9:06 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி அடுத்த கொட்டையூா் காலனி இந்திரா நகரை சோ்ந்தவா் சின்னபையன் (60). இவா் கடந்த 6-ஆம் தேதியன்று தனது வீட்டில் உள்ளவா்களிடம் நரசமங்களத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நரசமங்களம் பெரிய ஏரியில் சின்னபையன் இறந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். இது குறித்து அவரது மகன் செல்வம் மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.