மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் தவறி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 9:06 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற முதியவா் நீருக்குள் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஒன்றியம், கீழச்சேரி அடுத்த கொட்டையூா் காலனி இந்திரா நகரை சோ்ந்தவா் சின்னபையன் (60). இவா் கடந்த 6-ஆம் தேதியன்று தனது வீட்டில் உள்ளவா்களிடம் நரசமங்களத்தில் உள்ள பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் செல்வதாக கூறிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நரசமங்களம் பெரிய ஏரியில் சின்னபையன் இறந்த நிலையில் சடலமாக கிடந்தாராம். இது குறித்து அவரது மகன் செல்வம் மப்பேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.