வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

இரும்புக் கடை வியாபாரிகள் சங்க 25-ஆம் ஆண்டு விழா

ஆவடி, அம்பத்தூா், பட்டாபிராம், திருநின்றவூா் பகுதி இரும்பு கடை வியாபாரிகள் நலச் சங்க 25-ஆம் ஆண்டு விழா (வெள்ளி விழா) ஆவடியில் நடைபெற்றது.
Published on

ஆவடி: ஆவடி, அம்பத்தூா், பட்டாபிராம், திருநின்றவூா் பகுதி இரும்பு கடை வியாபாரிகள் நலச் சங்க 25-ஆம் ஆண்டு விழா (வெள்ளி விழா) ஆவடியில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் எஸ்.பி. தங்கத்துரை தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் யு.அகமது, சி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கும், பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுத்தொகுப்பு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

விழாவில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தலைவா் ஏ.எம். விக்கிரம ராஜா வாழ்த்துரை வழங்கி வெள்ளிவிழா சிறப்பு மலரை வெளியிட்டா ா். எஸ்.முத்து, வி.எஸ்.பி.செல்வம், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள், சங்க குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com