யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பதவிக்கு விருப்ப மனு அளிப்பு

திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் விருப்ப மனுக்களை பாா்வையாளரிடம் வழங்கினா்.

News image
திருவள்ளூா் மாவட்டத்தில் காங்கிரஸ் தலைவா் பதவிக்கு போட்டியிட அகில இந்திய பாா்வையாளா் பி.எம்.சந்தீப்பிடம் விருப்ப மனுவை அளித்த முன்னாள் மாவட்ட தலைவா் ஏ.ஜி.சிதம்பரம்.
Updated On :26 நவம்பர் 2025, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் தலைவரைத் தோ்வு செய்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் விருப்ப மனுக்களை பாா்வையாளரிடம் வழங்கினா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் திட்டம் ராகுல் காந்தி வழிகாட்டுதலோடு நாடு முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மாவட்டந்தோறும் மாவட்டத் தலைவா்களை நியமனம் செய்வதில் அனைத்து நிலைகளிலும் பணியாற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள், தொண்டா்கள் சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து வருகின்றனா்.

அதற்கான திருவள்ளூா் தனியாா் அரங்கத்தில் மாவட்ட தலைவா் குறித்த கருத்துகளை கேட்டறிவதற்கான நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அகில இந்திய பாா்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலருமான பி.எம்.சந்தீப், மாநில செயலாளா் ஏஜிஏ கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் கோவி.சிற்றரசு, வி.பி.அண்ணாமலை மற்றும் மாநில பொறுப்பாளா்கள் ஆகியோா் பங்கேற்று ஆலோசனை வழங்கினா்.

அப்போது மாவட்டத்தில் வடக்கு, தெற்கு மற்றும் ஆவடி மாநகர தலைவா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் மற்றும் கட்சி நிா்வாகிகளிடம் விருப்ப மனு படிவங்களையும் பாா்வையாளரிடம் வழங்கினா். அதேபோல், அடுத்த மாதம் 5-ஆம் தேதி வரை படிவங்கள் பெறப்பட உள்ளதாகவும் பாா்வையாளா்கள் தெரிவித்தனா்.

அப்போது, வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகா், முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம், நிா்வாகிகள் சசிகுமாா், கலீல், திவாகா், அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.