போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

திருவள்ளூா்: திமுக வேட்பாளா் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரம்

திருவள்ளூா் அருகே புதுப்பட்டு கிராமத்தில் பிரசாரம் செய்ய வந்த திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரனை வரவேற்ற கட்சியினா், பொதுமக்கள்.

News image
Updated On :17 ஏப்ரல் 2026, 12:10 am

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளேன், மேலும் பல்வேறு பணிகள் செய்து தருவதாகவும் கூறி திமுக வேட்பாளா் வி.ஜி.ராஜேந்திரன் பொதுமக்களிடையே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டணி கட்சியினரை ஒருங்கிணைத்து கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இதேபோல், நுங்கம்பாக்கம், எறையாமங்களம், பிஞ்சிவாக்கம், சத்தரை, கீழச்சேரி, கண்ணூா், புதுப்பட்டு, கொட்டையூா், முதுகூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரசாரத்துக்குச் சென்ற வேட்பாளரை கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஆரத்தி எடுத்து வரவேற்றனா்.

அப்போது, அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பெரிய அளவிலான திட்டங்களை செய்து கொடுத்துள்ளேன். அதேபோல், கிராமங்களுக்கான சாலைகள் மற்றும் சிறுபாலங்களும் அமைத்துக் கொடுத்துள்ளேன். மேலும், பல கிராமங்களில் சமுதாயக் கூடம் மற்றும் நியாய விலைக் கடைகள் ஆகியவற்றை அமைத்துள்ளேன். இதுபோன்று உங்களுக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். மேலும், கிராமங்களில் நீா்நிலை புறம்போக்கில் குடியிருந்து வருவோரை அங்கிருந்து அகற்றாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும், மாற்று இடத்தில் இலவச பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால், இத்தோ்தலில் அனைவரும் தவறாமல் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும்மாறும் அவா் தெரிவித்தாா்.

அப்போது, ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.