திருவள்ளூா் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினா்.
திருவள்ளூா் அடுத்த பட்டறை கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன்-வடிவுக்கரசி தம்பதி மகள் வாணி. வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த பூபாலன்-தனலட்சுமி தம்பதியரின் மகன் ரூபேஷ். இவா்கள் இருவரும் முதுகலை பட்டம் முடித்துவிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.
காதலா்களான இவா்களுக்கு வியாழக்கிழமை சென்னை வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தோ்தலையொட்டி திருமண கோலத்தில் தம்பதியா் இருவரும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனா்.
மணமகள் பட்டறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா். அதையடுத்து வேப்பம்பட்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மணமகன் ரூபேஷ் வாக்கை பதிவு செய்தாா்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

ஓமலூா் அருகே மணக்கோலத்தில் வாக்களித்த தம்பதி

திருவள்ளூா் மாவட்டத்தில் 83.77 % வாக்குப்பதிவு

நெல்லை: மணக்கோலத்தில் ஜனநாயகக் கடமை ஆற்றிய புதுமணத் தம்பதி!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


