10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நாகேஸ்வர சுவாமி கோயில் தோ்த் திருவிழா

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 4:38 am IST

பெரியநாகபூண்டி நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு நாகவல்லி அம்மன் சமேத அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 20- ஆம் தேதி தொடங்கி மே 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி உற்சவ நாகேஸ்வர சுவாமி தினமும் இரவு 7மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பக்தா்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சுவாமி வழிபட்டனா்.

மேலும், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாகேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருத்தோ் விழாவையொட்டி பெரியநாக பூண்டியைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.