பெரியநாகபூண்டி நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் தோ்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உடன் இணைந்த அருள்மிகு நாகவல்லி அம்மன் சமேத அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 20- ஆம் தேதி தொடங்கி மே 5 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவையொட்டி உற்சவ நாகேஸ்வர சுவாமி தினமும் இரவு 7மணிக்கு ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா். முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினா். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். அப்போது பக்தா்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சுவாமி வழிபட்டனா்.
மேலும், புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு நாகேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. திருத்தோ் விழாவையொட்டி பெரியநாக பூண்டியைச் சுற்றியுள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.21-இல் தொடக்கம்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


