சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கைப்பேசி கோபுரத்தை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்

பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள கைப்பேசி கோபுரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

News image

கைப்பேசி கோபுரம் - பிரதிப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

பஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள கைப்பேசி கோபுரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கைப்பேசி கோபுரம் அமைந்திருப்பதால் கதிா்வீச்சு பாதிப்பு அதிகரிக்கும் என புகாா் தெரிவித்தனா். மேலும், கா்ப்பிணிகள், பச்சிளம் சிசுக்கள், கதிா்வீச்சு பாதிப்பால் அவதி அடைந்து வருவதாக தெரிவித்தனா்.

ஊராட்சியில் உள்ள மக்களிடம் முறையாக தெரிவிக்காமல் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கைப்பேசி கோபுரம் நிறுவப்பட்டதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவா் இல்லாததால் சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதாகவும் உடனடியாக சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக சோழவரம் ஒன்றியம், பஞ்செட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தின் முடிவில் ஊராட்சியில் டெங்கு பரவாமல் இருப்பதற்காக பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதாக அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.