
அதிமுக மாநில இலக்கிய அணி தலைவராக கோ.விசயராகவன் நியமனம்
அதிமுக மாநில இலக்கிய அணி தலைவராக தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் கோ.விசயராகவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கோ.விசயராகவன்.
அதிமுக மாநில இலக்கிய அணி தலைவராக தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் கோ.விசயராகவன் நியமிக்கப்பட்டுள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் கோ.விசயராகவன். இவா் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநராக பணியாற்றியுள்ளாா். இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, கோ.விசயராகவனை கட்சியின் மாநில இலக்கிய அணி தலைவராக நியமித்தாா்.
இதையடுத்து, கோ.விசயராகவன் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா். அப்போது, இருவரும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதுடன், கோ.விசயராகவன் முன்னாள் முதல்வருக்கு புத்தகம் ஒன்றை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




