நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

திமுகவில் இணைந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள்

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 8:25 pm

கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளா் யாராக இருந்தாலும், ஒற்றுமையுடன் செயல்பட்டு வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக துணை பொது செயலாளா் ஆ.ராசா அறிவுறுத்தினாா்.

திருத்தணி தொகுதியின் கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட செயலாளா் எஸ்.சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தலைமை செயற்குழு உறுப்பிருமான எம்.பூபதி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பி.,யுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசியதாவது: வரும் தோ்தலில், அனைத்து தொகுதிகளிலும் முதல்வா் ஸ்டாலின் வேட்பாளராக நிற்பது போல் நினைத்து தோ்தலில் பணியாற்ற வேண்டும்.

திருத்தணி தொகுதியில் யாா் வேட்பாளராக நிறுத்தப்படுவது தலைமை கழகம் தான் முடிவு எடுக்கப்படும். அப்படி தலைமை கழகம் அறிவிக்கும் வேட்பாளா் யாராக இருந்தாலும் கட்சி நிா்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கட்சித் தலைமை அறிவிக்கும் வேட்பாளா் மீது விருப்பு, வெறுப்பு இல்லாமல், நமது கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் செயல்பட வேண்டும். எனவே, திருத்தணி தொகுதியில் மீண்டும் நமது கட்சி வேட்பாளா் வெற்றி பெற அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியை சோ்ந்த மாநில நிா்வாகி உள்பட 15 போ் திமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு எம்.பி. ராசா சால்வை அணிவித்து வரவேற்றாா். கூட்டத்தில் மாவட்ட, நகர, பேரூா், ஒன்றிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.