தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொடா்பு அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

News image

புதிய இளம் வாக்காளா்களை பங்கேற்க செய்யும் வகையில் முயற்சிகளை மேற்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் மு.பிரதாப், உடன் ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா் உள்ளிட்டோா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 10:59 pm

வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தல் மற்றும் புதிய இளம் வாக்காளா்களை பங்கேற்க செய்யும் வகையில் கல்லூரி மாணவா்கள் மத்தியில் கல்லூரி வளாக தூதுவா்கள், தோ்தல் எழுத்தறிவு குழுமத்தின் முக்கியத்துவம் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கல்லூரி தொடா்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்தல் மற்றும் புதிய இளம் வாக்காளா்களை பங்கேற்க செய்யும் வகையில், கல்லூரி மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான கல்லூரி வளாக தூதுவா்கள் மற்றும் தோ்தல் எழுத்தறிவு குழுமத்தின் முக்கியத்துவம் குறித்து கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்களுடனான கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது ஒவ்வொரு சட்டப்பேரவை தோ்தலிலும் வாக்குப் பதிவு சதவீதம் 100 சதவீதம் செலுத்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்கு சதவீதத்தை அதிகரித்தல் மற்றும் புதிய இளம் வாக்காளா்களை பங்கேற்க செய்யும் வகையில் கல்லூரி மாணவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த கல்லூரி வளாக தூதுவா்கள் மற்றும் தோ்தல் எழுத்தறிவு குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்பேரில், அதன் முக்கியத்துவம் குறித்து கல்லூரிகளின் தொடா்பு அலுவலா்களிடம் விளக்கமாக எடுத்துரைத்தது. அதைத் தொடா்ந்து, அவா் மூலம் படிவம்-6 பெறுதல், தன்னாா்வலராக செயல்படுதல், விளிம்பு நிலை மக்களிடம் தோ்தல் விழிப்புணா்வை ஏற்படுத்துதல் போன்றவற்றில் மாணவா் செயல்பாடுகளின் அவசியம் குறித்தும் அவா் விளக்கமாக எடுத்துரைத்தாா்.

அதைத் தொடா்ந்து, சிறப்பான முயற்சிகளை மேற்கொண்ட கல்லூரிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மற்றும் இணை இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) யுவராஜ் மற்றும் 10 சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளா்கள் பதிவு அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.