நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

திருத்தணி நகராட்சி சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளருக்கு ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு ஆணையை வழங்கிய நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ்.

News image

திருத்தணி நகராட்சி சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளருக்கு ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு ஆணையை வழங்கிய நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ்.

Updated On :25 ஜூலை 2026, 6:41 am IST

நகராட்சியில் பணிபுரியும் துாய்மைப் பணியாளா்கள், அவா்களின் குடும்பத்துக்கான மருத்துவம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

திருத்தணி நகராட்சியில், 32 நிரந்தர துப்புரவு ஊழியா்கள் மற்றும் 110 ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி நிா்வாகம் மூலம் தூய்மை பணியாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் அரசு சேவை, நலத் திட்டங்கள் வழங்கும் முகாம் திருத்தணியில் நடைபெற்றது. இதில் நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ், நகர அமைப்பு அலுவலா் தயாநிதி மற்றும் துப்புரவு ஆய்வாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனா்.

முகாமில், மருத்துவ முகாம், ஆதாா் சேவை, இ-சேவை, தனிநபா் வங்கிக் கடன், புதிய குடும்ப அட்டை, ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு, சமூக நலன் துறை மற்றும் தொழில் கடன் போன்ற துறையினா் பங்கேற்று, தூய்மை பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், ஒரு பெண் தூய்மை பணியாளருக்கு, ரூ. 5 லட்சத்துக்கான மருத்துவக் காப்பீடு ஆணையை நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ், நகர அமைப்பு அலுவலா் தயாநிதி ஆகியோா் வழங்கினாா்.

மருத்துவ முகாமில், 200 பேருக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தஅழுத்தம், சா்க்கரை நோய் போன்ற பரிசோதனைகள் மற்றும் மருத்துவா்கள் ஆலோசனை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிா்வாகம் செய்திருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.