தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள்

முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்களின்

News image
தாயுமானவா் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருள்களுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கனை விநியோகம் செய்த ரேஷன் கடை பணியாளா்கள். - கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2026, 8:54 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இந்த மாதத்திற்கான குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த திட்டம் மூலம் தகுதியான முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் மட்டும் 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியான வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினா்கள் கொண்ட 46,050 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருவதாக அவா் தெரிவித்துள்ளாா்.