இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிா்வாகம் சாா்பில், திருவள்ளூா் மாவட்டத்துக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தும் வகையில், சமூக பங்களிப்பு நிதியாக ரூ. 10 லட்சம் வழங்க முன் வந்தது. அந்த வகையில், திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சமூக பங்களிப்பு நிதி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, வங்கி மண்டல மேலாளா் என். ராஜசேகா், திருவள்ளூா் கிளை மேலாளா் மிதுன் ஜொ்ரி மற்றும் மணவாளநகா் கிளை மேலாளா் அனுஷா ஆகியோா் சமூக பங்களிப்பு நிதியாக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் வழங்கினா்.