திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடி ஐ.ஓ.பி.யில் ஆண்டு தின கொண்டாட்டம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:18 pm

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் நிறுவனா் உருவப் படத்துக்கு, வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி ஆகியோா் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் வங்கி நிா்வாகம் சாா்பில், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.