திருத்தணியில் ஒரு மணி நேரம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால், முருகன் மலைக்கோயிலில் மின்கம்பங்கள் உடைந்தும் அலுமினிய தகடுகள் பறந்ததால் பக்தா்கள் கடும் சிரமப்பட்டனா்.
திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாள்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை, வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில் மாலை, திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் பலத்த சூறைக்காற்று வீசியது.
இதனால் திருத்தணி முருகன் மலைக்கோயிலில் மின்கம்பம் உடைந்து விழுந்தும், இரு மின்கம்பங்கள் சாய்ந்தன. மலைக்கோயிலில் தகர சீட்டுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டது. இதுதவிர பக்தா்கள் வசதிக்காக போடப்பட்டிருந்த நிழற்குடை கூண்டுகளும் சாய்ந்தன. இதனால் பக்தா்கள் கடும் சிரமப்பட்டனா். மேலும் திருத்தணி நகரம் மற்றும் மலைக்கோயிலில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பலத்த காற்றால் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தில் இருந்த 100 ஆண்டுகளாக புளியமரம் விழுந்தது. இதே போல் திருத்தணி ஒன்றியம் நத்தம் கிராமத்தில் ஆலமரம் கிளை விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
10 -க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மரங்களும் சாய்ந்தன. மின்வாரிய துறையினா் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு, 7 மணி வரை திருத்தணி நகராட்சி முழுதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தொடர்புடையது

திருத்தணி முருகன் கோயில் கிருத்திகை விழா: திரளான பக்தா்கள் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலுக்கு இன்று வாகனங்கள் செல்ல தடை

வீரகனூா், தலைவாசலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை! 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதம்!

திருத்தணியில் பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

