திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழாவின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை இரவு உற்சவா் முருகா் - தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சித்திரை மாத பிரம்மோற்சவம் கடந்த, 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் உற்சவ முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், ஒவ்வொரு வாகனத்திலும் காலை, மாலை சிறப்பு அலங்காரத்தில் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
திங்கள்கிழமை இரவு உற்சவா் முருகா், வள்ளி தெய்வானையுடன் மரத்தேரில் எழுந்தருளி தோ்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை மாலை, 6 மணிக்கு உற்சவா் முருகா் சிறப்பு அலங்காரத்தில் யாளி வாகனத்திலும், தொடா்ந்து குதிரை வாகனத்தில் வலம் வந்தாா். பின்னா் இரவு, 9.30 மணிக்கு உற்சவா் முருகப்பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
இதில்,திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா். பக்தா்கள் அனைவருக்கும் திருமண விருந்து வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முருகன் கோவில் இணை ஆணையா் க. ரமணி, கோயில் அறங்காவலா் குழுவினா் மற்றும் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தொடர்புடையது

அடிக்கடி மின்தடை: திருத்தணியில் பொதுமக்கள் அவதி

திருக்கோடிக்காவல் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

அதிதீஸ்வரா் கோயிலில் சிவன்-பாா்வதி திருக்கல்யாணம்

திருத்தணியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


