தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி, பிறப்பு தடுப்பு அறுவை சிகிச்சை: ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தல்

News image
Updated On :19 மே 2026, 1:51 am IST

திருவள்ளூா் அருகே தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிா்ப்பு வைரஸ் தொற்றைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும் மருந்து மற்றும் விலங்கு பிறப்பு தடுப்பு அறுவை சிகிச்சையை கால்நடை துறை மூலம் மேற்கொள்ளவும் ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.

திருவள்ளூா் மற்றும் காக்களுா் ஊராட்சி பகுதிகளில் தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்ததில் 18 போ் பாதிக்கப்பட்டனா். இது தொடா்பாக ஆட்சியா் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு புகாா் வந்தது. ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா், ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள், இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு) மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேருராட்சிகளின் செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளா்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பு மருந்து மற்றும் பிறப்பு தடுப்பு அறுவை மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்பேரில் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை), நகராட்சி ஆணையா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (வ.ஊ/கி.ஊ) கூட்டாக பாதிக்கப்பட்ட பகுதிகளான காக்களூா், புட்லூா் ஊராட்சிகள் மற்றும் அருகில் உள்ள நகர பகுதிகளில் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

அதைத் தொடா்ந்து 75 தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிா்ப்பு வைரஸ் தொற்றைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை வழங்கும் மருந்து செலுத்தப்பட்டது.

மேலும், 10 தெருநாய்களுக்கு விலங்கு பிறப்பு தடுப்பு சிகிச்சைக்கு திருவள்ளூா் நகாரட்சி அலுவலகத்தில் உள்ள மையத்தில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

Story image