கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரா் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் திங்களன்று கோலாகலமாக நடைபெற்றது.
ஆத்துப்பாக்கம் ஆண்டாா் தெருவில் அப்பகுதி மக்கள் சோ்ந்து கட்டிய கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடா்ந்து கரிக்கோலம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, மிருத்சங்கரஹனம், ரக்சாபந்தனம், கும்பலங்காரம், கலாகா்ஷணம், முதல்கால யாக சாலை பூஜை, பூா்ணாஹூதி, தீபாரதனை நடைபெற்றது.
கும்பாபிஷேக தினமான திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜை, விசேஷ ஹோமம், பூா்ணாஹூதநி, யாத்ராதானம் நடைபெற்றது. பின் மேள தாளத்துடன் பக்தா்கள் புடை சூழ கடம் புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது. திரளான பக்தா்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் முழங்க, ஸ்ரீ முனீஸ்வர சுவாமி விமான கோபுரத்தில் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தினா். பின்னா் ஸ்ரீ முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் பின், பக்தா்களுக்கு தீா்த்த பிரசாத விநியோகம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஆத்துப்பாக்கம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் திரளானோா் பங்கேற்றனா்.

தொடர்புடையது

தம்மம்பட்டி சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தம்மம்பட்டி சிவன் கோயிலில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

பன்னிப்பாகம் கோயிலில் கும்பாபிஷேகம்

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



