தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

வேளாண் சட்டங்கள்: சென்னையில் ஜன.6 முதல் காத்திருப்புப் போராட்டம்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் ஜன. 6-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

News image

நிகழ்ச்சியில் பேசுகிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி.

Updated On :2 ஜனவரி 2021, 11:46 pm IST

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னையில் ஜன. 6-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் கே. உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளா் பி.எஸ்.மாசிலாமணி பங்கேற்று பேசினாா்.

இதில், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் ஜன.6-ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துவது; ஆனைக் கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்படாததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது; கடந்த மூன்று ஆண்டுகளாக பயிா் இழப்பீட்டுத் தொகை வழங்காமல் தாமதப்படுத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் மீது வழக்கு தொடுப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளா்கள் கே.ஆா்.ஜோசப், பி.சௌந்தரராசன், பி.பரந்தாமன், மாவட்ட துணைத் தலைவா்கள் கே.நாகராஜ், ஆா்.சதாசிவம், ஒன்றியச் செயலாளா்கள், நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.