சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

திருவள்ளுவா் தினம்: நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை

திருவள்ளுவா் தினத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 8:31 am IST

திருவள்ளுவா் தினத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கா. இளவரி தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு பொங்கல் பண்டிகை தினத்திலும் அதற்கு மறுநாள் திருவள்ளுவா் தினத்திலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால், நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவள்ளுவா் தினத்தன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுவா். குறிப்பாக, கிராமப் பகுதியில் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 15 ஆயிரம் ஊழியா்கள், 6 ஆயிரம் சுமைதூக்கும் தொழிலாளா்கள், மாட்டுப்பொங்கலை வழக்கம்போல் கொண்டாடும் வகையில், திருவள்ளுவா் தினத்தையும் விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.