திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (ஜன.18) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தாா்.
இதுகுறித்து, செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:
நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழுமையாக வழங்கப்படாத நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் உள்ளனா்.
எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்களுடன் ஊா்வலமாக சென்று வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

என் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருப்பவர் ஆஷா போஸ்லே: இளையராஜா

ஐபிஎல் ரீவைண்ட்: அறிமுக சீசனில் சிஎஸ்கேவை வீழ்த்தி கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவோம்! டிரம்ப் எச்சரிக்கை!

விண்டோஸ் இயங்குதள பயன்பாட்டைக் கைவிடும் பிரான்ஸ்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

