ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

மழை பாதிப்பு: நிவாரணம் கோரி ஜன 18-இல் சாலை மறியல்; மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில்

Updated On :17 ஜனவரி 2021, 2:37 am

திருவாரூா் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (ஜன.18) சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் கூறியது:

நிவா், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழுமையாக வழங்கப்படாத நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் செய்வதறியாது வேதனையில் உள்ளனா்.

எனவே, பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் பாதிக்கப்பட்ட பயிா்களுடன் ஊா்வலமாக சென்று வட்டாட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.