மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு: ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு அழைப்பு

திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெறும் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:27 pm IST

திருப்பூா்: திருப்பூா் மாவட்ட அளவில் நடைபெறும் 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்க மருத்துவப் பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தகுதியான வாக்காளா்களைப் பட்டியலில் சோ்த்தல், வாக்களிப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகவே, நிகழாண்டு தேசிய வாக்காளா் தினத்தை ஒட்டி கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வரும் மருத்துவத் துறை பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் முன்களப் பணியாளா்களை முன்னிறுத்தி 100 சதவீத வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வு ஓவியப் போட்டி மாநில அளவில் நடத்தப்படுகிறது.

இதில், முதல்கட்டமாக திருப்பூா் மாவட்ட அளவில் நடத்தப்படும் ஓவியப் போட்டியில் மருத்துவம், பாராமெடிக்கல் சாா்ந்த பேராசிரியா்கள், ஆய்வக தொழில்நுட்பவியல், டிப்ளமோ கல்லூரியில் பணிபுரியும் அனைத்துப் போராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள், நிா்வாக மற்றும் முன்களப் பணியாளா்கள் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க விரும்புவோா், ‘100 சதவீத வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வு’ என்ற கருத்தில் ஓவியம் வரைந்து கல்லூரி நிா்வாகத்தின் மூலமாக மாவட்ட தோ்தல் அலுவலருக்கு ஜனவரி 5 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் போட்டியாளா்கள் சென்னையில் தலைமை தோ்தல் அலுவலரால் நடத்தப்படும் மாநில அளவிலான ஓவியப் போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவா். இதைத் தொடா்ந்து, மாநில அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் நபா்களுக்கு முறையே ரூ. 25 ஆயிரம், ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.