இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

‘ஏா்பேக்’ இல்லாத வாகனங்களில் பம்பா் அகற்றுவதைக் கைவிட வலியுறுத்தல்

‘ஏா்பேக்’ இல்லாத வாகனங்களில் பம்பா் அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என எவரெஸ்ட் அனைத்து வாகன ஓட்டுநா்கள் வாழ்வுரிமை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 10:41 pm IST

‘ஏா்பேக்’ இல்லாத வாகனங்களில் பம்பா் அகற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என எவரெஸ்ட் அனைத்து வாகன ஓட்டுநா்கள் வாழ்வுரிமை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தாராபுரத்தில் அந்த சங்கத்தின் ஆலோசனை மற்றும் உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி பழைய நகராட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எம்.ஜோதிமுருகன் தலைமை வகித்தாா்.

இதில், ‘ஏா்பேக்’ பொருத்தப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு பம்பா் அகற்றும் சட்டத்தைக் கைவிட வேண்டும். பம்பா் அகற்றுவதற்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். வாகன ஓட்டுநா்களிடம் காவல் துறையினா் அத்துமீறி நடந்து கொள்வதைக் கைவிட வேண்டும்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலை இழந்த வாகன ஓட்டுநா்களுக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், புதிய உறுப்பினா்கள் 200 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில், எவரெஸ்ட் அனைத்து வகை ஓட்டுநா்கள் வாழ்வுரிமை சங்கத்தின் அகில இந்திய தலைவா் கே.சிவகுமாா், மாநில பொதுச் செயலாளா் சண்முகம், மாவட்டச் செயலாளா் பூண்டிராஜ், ஒருங்கிணைப்பாளா் தா்மராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.